Posts

சங்ககால வேளிர்கள் கதைகள் ( தொடர்) - அகுதை

Image
சங்ககால வேளிர்கள் கதைகள்   (தொடர்) அகுதை  தமிழ் வரலாற்றில் மறக்கப்பட்ட அல்லது குறிப்பிட படாத சங்ககால வேளிர்கள் பற்றிய சுவையான தகவல்களை வாசகர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற தணியாத ஆவலில் உருவானதுதான் இந்த தலைப்பு. சங்க கால அரசர்களில் நாம் கொடை வள்ளல்களை குறித்து நிறைய அறிந்து உள்ளோம். ஆனால் சிறிய வேளிர்கள், குறுநில மன்னர்கள் குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லாத நிலையில், அவர்களை குறித்த தகவல்களை வருங்கால சமுதாயத்திற்கு சொல்வதும், அந்த அரசர்களை நாமும் அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. நம் இளைய தலைமுறைக்கு இந்த அரசர்களின் பெருமையை கதையாக சொல்வதன் மூலம், அந்த அரசர்களின் அகம் மற்றும் புற சிறப்புகளை அவர்களுக்குள் விதைப்பது என்பது விதைகள் பதிப்பகத்தின்  சமுதாய பொறுப்பாக மாறியுள்ளது. அந்த வகையில் இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கும் சங்க கால அரசன் அகுதை. பரணர், கபிலர், கல்லாடனார், வெள்ளெருக்கிலையார் ஆகிய புலவர்களால் பாடப்பட்ட இந்த அரசனை குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க…  கூடல் நகரின் அரசனாக இருந்தவன் அகுதை. இந்த கூடல் நகரை மதுரை என்றும், சில அறிஞர்கள் கூற்றுப்படி...

தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 3

Image
 தீ….தீ….தித்திக்கும் தீ…..  (கருவறை களவுகள்)    அத்தியாயம் - 3 ‘பீரு வேணுமா? பிராந்தி வேணுமா? ஜின்னு வேணுமா?’ என்ற பாடலுக்கு கவர்ச்சிக் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கலாம். அரை குறையான ஆடையில் அவள் காட்டிய முகபாவங்களும் நடன அசைவுகளும் அடிப்பொலியாக இருந்தது என்னமோ உண்மை. அவளுக்கு நன்றாக நடிக்கவும் தெரிந்திருந்தது! அதே நேரத்தில் வார்த்தைகளுக்கு ஏற்ப உணர்ச்சிகளைக் காட்டவும், நடன அசைவுகளை நளினமாக கொடுக்கவும் இயல்பாகவே வந்தது என்று கூட சொல்லலாம்.  அவளது வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சரசரவென்று கமெண்டில், உணர்ச்சி பொங்க தட்டச்சு செய்யத் தொடங்கினான். ‘அன்பே நீ என்ன மின்னலா? இல்லை என்னைக் கொல்ல வந்த ராட்சசியா? இப்படி எல்லாம் ஆடி என்னை தூங்க விடாம செய்யாதே’ எழுதிவிட்டு பத்து பதினைந்து ஹார்டின் எமோஜியையும், இருபது முப்பது முத்த எமோஜிகளையும் சேர்ந்து சென்ட் செய்தவன், அவளது வேறு வீடியோக்களை பார்க்கும் வேலையைத் தொடங்கினான்.  பேருந்தில் சென்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், அதே பெண்ணின் வீடியோக்களை ஒன்று விடாமல் ப...

தமிழ்நாட்டின் நவீன அரசியல் களம்

Image
  தமிழ்நாட்டின் நவீன அரசியல் களம் அரசியல் என்னும் ஆக்கப்பூர்வமான பணியை இன்றைய தலைமுறை எப்படி பிரதிபலிக்கிறது?. அல்லது எப்படி புரிந்த கொண்டிருக்கிறது. அரசியலை தவறான புரிதலுடன் கற்றுக் கொண்டு...  இல்லை! இல்லை! கற்கவே முயற்சிக்காமல்... தலைவராக மாறி ஆட்சியை நடத்திவிடலாம் என்ற ரீதியிலேயே இன்றைய தலைமுறை இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது. நவீன அரசியல் என்ற இந்த கட்டுரை அரசியலின் பால பாடத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்னும் புள்ளியில் இருந்து விரிகிறது. முழுமையாக படியுங்கள்! அரசியல் என்ற உன்னத பணியின் மேன்மையை உணர்ந்து கொள்ளுங்கள். பிரதிலிபி வாசகர்களுக்கு நவீன அரசியலை குறித்து விரிவாக விளக்க கிடைத்த வாய்ப்பை இங்கே சரியாக பயன்படுத்த்திக் கொள்ள முயற்சிக்கிறேன். 1.தமிழக அரசியல் களம்  அதிகாரத்தின் அரங்கமும், அறத்தின் அத்துமீறலும் மட்டுமே நவீன தமிழக அரசியலில் இருக்கிறது என்றால் அதுதான் நிதர்சனமான உண்மை. இது கொஞ்சம் வலிக்கிறது என்றாலும், நேரடியாக குற்றம் சொல்கிறது என்றாலும் அதுவே எதார்த்தமும் நடைமுறையயுமாகவும் இருக்கிறது. எப்படி?...... தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு ஒரு காலத்தில் சமூக நீத...

காற்று வெளியிடை கண்ணம்மா

Image
காற்று வெளியிடை கண்ணம்மா (நேரலையில் ஒரு காதல் கதை….) தொடர் கதை  1. முகிலனைத் தேடும் முகிலினங்கள் வங்கக் கடலோடு இரவெல்லாம் காதலில் திளைத்து மகிழ்ந்திருந்த உற்சாக புன்னகையை காட்டியபடி, கடமையாற்ற கிளம்பியிருந்தான் அருணன் என்னும் பகலவன்.  ‘மெரினாவின் மணல்வெளியை ஓயாது முத்தமிட்டு மகிழ்ந்திருந்தாள் கடல்குமரி. தீராத அலையெனினும் தீரமுடன் போராடி, அந்நியனின் கண்ணிலெல்லாம் மணல்பொடியை தூவிவிட்டு, சமுத்திரத்தின் மச்சங்களை அள்ளிவந்த கட்டுமரங்களின் அணிவகுப்பு, ஆழ்கடலின் ஆபத்துக்களில் எல்லாம் வென்று வரும் வெள்ளித் தேர்களாக காட்சியளித்தது.  தெள்ளு தமிழ் கொஞ்சியாடும் நாவாளர் அண்ணாவின் சதுக்கம் தொட்டு, கலங்கரை விளக்கு வரையான காமராஜர் சாலையெங்கும் நடைப்பயிற்சி செய்ய வந்தவர்கள் தலைகளால் நிறைந்திருந்த அற்புத காலை அது……  பலரின் காதுகளில் மாட்டியிருந்த ஹெட்-போன்களிலும் ஒலித்துக் கொண்டிருந்த வானம்பாடி எப்.எம்-மில் அறிவிப்பாளரின் வசீகர குரல் ரீங்காரமிட்டது!. “காற்றலையில் கதை சொல்ல வரும் உங்கள் வானம்பாடி  எப்.எம்மின் அன்பு அறிவிப்பாளன் நான் மகேஷ். நேரம் சரியாக ஆறு மணி முப்பது நிமிடங்கள். ...